தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காரைக்காலைச் சேர்ந்த 10 மீனவர்களை சிறைப்பிடித்தது இலங்கை

காரைக்கால் பகுதியிலிருந்து கடலில் மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்தனர்.

Updated On :10 டிசம்பர் 2015, 9:15 am

காரைக்கால் பகுதியிலிருந்து கடலில் மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்தனர்.

வீரமணி என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க சென்ற 10 பேர், சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தள்ளதாக மீன்வளத் துறை துணை இயக்குநர் காளிமுத்து கூறினார்.

இதனிடையே கடந்த நவம்பர் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இதே பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களின் நீதிமன்ற காவலை டிசம்பர் 21 ஆம் தேதி வரை நீடித்து முனாறு நீதிபதி கிளாசி அலெக்ஸ் ராஜா உத்தரவிட்டார்.

மேலும் அதே நவம்பர் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களின் காவலை டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீட்டித்து யாழ்பாணம் முதன்மை நீதிமன்ற நீதிபதி சரோஜினி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.