வால்பாறையில் யானைத் தாக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளி பலி

வால்பாறையில் இன்று காலை காட்டு யானைத் தாக்கியதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
Updated on
1 min read

வால்பாறையில் இன்று காலை காட்டு யானைத் தாக்கியதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

55 வயதான ஜேம்ஸ் என்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளி இன்று காலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே இரண்டு காட்டு யானைகள் வந்ததைப் பார்த்து தப்பியோடினார்.

ஆனால், ஒரு யானை வேகமாக அவரை விரட்டிச் சென்று பிடித்து தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வால்பாறையைச் சுற்றிலும் சுமார் 15 நாட்களாக காட்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றன. விவசாய நிலங்களை அழித்தும், அங்கிருந்த பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும் வருகின்றன.

அவற்றை பட்டாசுகள் வெடித்து காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com