மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் வெட்டிக் கொலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரை வெட்டிக் கொலை செய்தார்.

News image
Updated On :28 டிசம்பர் 2015, 2:48 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரை வெட்டிக் கொலை செய்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், அய்யம்பட்டி சிமெண்ட் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (35). சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வித்யா (24). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உண்டு. வித்யா திருமணத்திற்கு முன்னர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை மறைத்து ஆனந்திற்கு திருமணம் செய்து வைத்தார்களாம். தொடர்ந்து ஆனந்த் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவருடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வீட்டில் இருந்த வித்யாவை, ஆனந்த் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸார் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்து, வித்யாவின் சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.