நெடுங்குளம்-ராமகிருஷ்ணா காலனி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் பைக்கை குறுக்கே பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளார்கள். பின்னர் ஓட்டுநரை, பேருந்து ஓட்டவிடாமல் தடுத்து, ஆபாசாமாகப் பேசி, அரசு வேலை செய்யவிடாமல் தடுத்து மிரட்டிச் சென்றுள்ளார்கள்.
இது குறித்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஓட்டுநர் வரதராஜ் புகார் செய்தார். போலீஸார் நெடுங்குளத்தைச் சேர்ந்த ராஜ் மகன் சதீஷ்குமார், பால்மாணிக்கம் மகன் முத்துக்குமார், வீரன் மகன் பாலமுருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.
இளம் பெண் மானபங்கம்: ஒருவர் கைது
நெடுங்குளம், ராமகிருஷ்ணா காலனி பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை இரவு தங்கமுனியாண்டி மனைவி செல்வராணி (25) என்பவர் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், செல்வராணியை முதுகில் அடித்து அவரது நைட்டியைப் பிடித்து இழுத்து, ஆபாசமாகப் பேசியுள்ளார்கள். அவர் சத்தம்போட்டு கணவரை அழைத்துள்ளார்.