விருதுநகர் மாவட்டத்தில் புதியதாக பா.ஜ.க.யில் 1.70 லட்சம் பேர்: மாவட்டச் செயலாளர் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் புதியதாக பாரதீய ஜனதா கட்சியில் 1.70 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சரவணதுரை (எ) ராஜா கூறினார்.


விருதுநகர் மாவட்டத்தில் புதியதாக பாரதீய ஜனதா கட்சியில் 1.70 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சரவணதுரை (எ) ராஜா கூறினார்.
நாடு முழுவதும் மிஸ்டு கால் மூலம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் புதியதாக தங்களை பாரதீய ஜனதா கட்சியில் இணைத்துக் கொள்ள 1.70 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்து மிஸ்டு கால் கொடுத்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மட்டும் 22 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதனை உறுதி செய்வதற்காக அவர்களை நேரடியாக சந்திக்கும் இயக்கம் சனிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கியது.
இந்த இயக்கத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சரவணதுரை (எ) ராஜா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.பார்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவர் ஜி.டி.சோலையப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் ஞானபண்டிதன், நகத் தலைவர் சேடப்பட்டி முருகன், நகரச் செயலாளர் ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...