அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது

விருதுநகரில் வணிக வளாக உரிமையாளரை குடிபோதையில் கல்லால் தாக்கி காயப்படுத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :18 ஜூலை 2015, 12:44 pm

விருதுநகரில் வணிக வளாக உரிமையாளரை குடிபோதையில் கல்லால் தாக்கி காயப்படுத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

 விருதுநகர் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மணிகண்டன்(28).  இப்பகுதியில் இவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. அதில், அம்பேத்கார் நகரைச் சேர்ந்த அல்போன்ஸ்(32) என்பவர் வணிக வளாகப் பகுதியில் அமர்ந்து மதுக் குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இதை உரிமையாளர் மணிகண்டன் பலமுறை தட்டிக் கேட்டாராம். அதேபோல், வெள்ளிக்கிழமை இரவிலும் வணிக வளாகப் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்ததை பார்த்து தட்டிக் கேட்டதால், ஆத்திரம் அடைந்த நிலையில் அல்போன்ஸ் கல்லால் தாக்கி மணிகண்டனை காயப்படுத்தினாராம்.

    இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அல்போன்ஸ் மீது வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.