மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வீடு கட்ட மாட்டு வண்டியில் மணல் அடிக்க மறுத்தவர் குத்திக் கொலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு கட்டுவதற்கு மாட்டு வண்டியில் மணல் அடிக்க

News image
Updated On :20 ஜூலை 2015, 5:31 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு கட்டுவதற்கு மாட்டு வண்டியில் மணல் அடிக்க மறுத்தவரைக் குத்திக் கொலை செய்த நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மாத்தூர், ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் கணேசன் (48). இவர் மாட்டு வண்டி வைத்து மணல் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இதே இடத்தைச் சேர்ந்தவர் கணபதி மகன் அன்புராஜ். இருவரும் உறவினர்கள். அன்புராஜ் வீடு கட்டி வருகி்றார். இதற்காக மணல் அடிக்க கணேசனை அணுகியுள்ளார். ஆனால் அவர் மணல் அடிக்க மறுத்திவிட்டாராம். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு அன்புராஜ், கணேசனை கத்தியால் குத்தியுள்ளார். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட கணேசன், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அன்புராஜை தேடி வருகிறார்கள,.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.