புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்
டெங்கு நோய் எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு நலவழித்துறை மற்றும் தேசிய கொசு மற்றும் பூச்சுகளால் பரவும் நோய் தடுப்புத்திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.


டெங்கு நோய் எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு நலவழித்துறை மற்றும் தேசிய கொசு மற்றும் பூச்சுகளால் பரவும் நோய் தடுப்புத்திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை மலேரியா உதவி இயக்குநர் சுந்தர்ராஜன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார், மருத்துவர் நித்தியானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணியில் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக்கல்லூரி மாணவிகள் மற்றும் பல்வேறு செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு டெங்குகாய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே வலியுறுத்தும் வகையில் பேரணியாக சென்றனர்.
பேரணியின் போது மாணவிகள் டெங்கு காய்ச்சல் மற்றும் நோய்கள் குறித்தும் அவைகளை தடுப்பது குறித்தான பதாகைகளை கையில் ஏந்திச்சென்றனர். மேலும் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இப்பேரணி இறுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறைவுபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...