திருச்சுழி அருகே அரசு பேருந்தில் படியில் பயணித்த மாணவனின் கால் விரல்கள் துண்டான சம்பவம் தொடர்பாக நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சுழியைச் சேர்ந்த லூக்கேஷ்ராஜ்(15). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் காலையில் பள்ளிக்கு செல்வதற்கு அரசு பேருந்தில் ஏறி படியின் நின்று கொண்டு காலை தொங்கவிட்டுக் கொண்டு வந்தாராம். அப்போது, குலசேகரநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே வேகத்தடையில் ஏறி இறங்கும் போது கால் தரையில் உரசியதில் இரண்டு விரல்கள் துண்டானது. உடனே காயம் அடைந்த மாணவனை அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக லூக்கேஷ்ராஜ் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு அரசு பேருந்து நடத்துனர் பிரின்ஸ் கிருபாகரன்(50), ஓட்டுநர் ஜெயநாராயணன்(42) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

