எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அம்பை: பணத்தை பறக்க விட்டு ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.2 லட்சம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் செவ்வாய்க்கிழமை வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் இருந்து ரூ. 2 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :3 நவம்பர் 2015, 12:03 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் செவ்வாய்க்கிழமை வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் இருந்து ரூ. 2 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை  போலீஸார் தேடி வருகின்றனர்.

விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்பட்டியை சேர்ந்தவர் கே.எஸ். ஆறுமுகம் (64). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் செவ்வாய்க்கிழமை அம்பாசமுத்திரத்தில் பிரதான சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ. 2 லட்சத்தை எடுத்தார்.

பணத்தை பையில் வைத்து வங்கியின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளின் முன்பக்க கவரில் வைத்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், கீழே ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு ஆறுமுகத்தின் கவனத்தை திசை திருப்பி, மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை எடுத்து கொண்டு தப்பிவிட்டனர்.

பட்டப் பகலில் கண் இமைக்கும் நேரத்தில் ஆசிரியரிடம் இருந்து ரூ. 2 லட்சத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலிறிந்த அம்பாசமுத்திரம் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வங்கியின் கேமிராவில் மர்ம நபர்கள் பதிவாகி உள்ளனரா என கேமரா பதிவினை பார்வையிட்டனர். வழக்குப் பதிந்து போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.