தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லையில் போக்குவரத்துக் கழக பணிமனையில் பரிதாபம்: பேருந்து மோதி ஊழியர் சாவு

திருநெல்வேலியில் திங்கள்கிழமை அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பேருந்து மோதியதில் பணியில் ஈடுபட்டிருந்த மாற்றுத் திறனாளி ஊழியர் இறந்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2015, 8:36 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் திங்கள்கிழமை அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பேருந்து மோதியதில் பணியில் ஈடுபட்டிருந்த மாற்றுத் திறனாளி ஊழியர் இறந்தார்.

பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் ரோஹ்னிகிருஷ்ணன் (35). மாற்றுத் திறனாளியான இவர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் திருநெல்வேலி வண்ணார்பேட்டை பணிமனையில் தற்காலிக பணியாளராக பணி செய்து வந்தார்.

ரோஹ்னிகிருஷ்ணன் திங்கள்கிழமை காலை வழக்கம்போல், பேருந்துகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது பணிமனையில் இருந்து ஓட்டுநர் ஒரு பேருந்தை வழித்தடத்தில் இயக்குவதற்காக எடுக்க முயன்றாராம்.

எதிர்பாராத விதமாக பின்னோக்கி வந்த பேருந்து ரோஹ்னிகிருஷ்ணன் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரோஹ்னிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.