ரூ. 5 கோடி 'கோகைன்' கடத்தல்: தென் ஆப்பிரிக்க பெண் சென்னையில் கைது

சர்வதேச சந்தையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்தியதாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், போதை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சென்னையில் அண்மையில் கைது செய்தனர்.
ரூ. 5 கோடி 'கோகைன்' கடத்தல்: தென் ஆப்பிரிக்க பெண் சென்னையில் கைது
Updated on
1 min read

சர்வதேச சந்தையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்தியதாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரை போதை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் (என்.சி.பி.) சென்னையில் அண்மையில் கைது செய்தனர்.

போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் போலீஸாருக்கு கடந்த வாரம் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய தென் ஆப்பிக்கா பெண் மோல்பீ கே. லிஸி என்பவரிடம் சோதனை நடத்தினர்.

அப்போது அவரிடம் 990 கிராம் எடையுள்ள `கோகைன்' என்னும் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் ரூ. 5 கோடி மதிப்பிலான அதை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பிரேசில் நகரான சா போலாவிலிருந்து துபை வழியாக சென்னைக்கு வந்த போது லிஸி பிடிபட்டார்.

சென்னையில் பிடிப்பட்ட போதைப் பொருள்களில் இதுவே மிக அதிகமாகும் என என்.சி.பி. மண்டல இயக்குநர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறினார்.

சுற்றுலா விசாவில் சென்னை வந்த லிஸி போதைப் பொருளை கொடுத்துவிட்டு, மீண்டும் தென் ஆப்பிரிக்க செல்வதற்கு திட்டமிட்டிருந்தார் என்றார் சின்ஹா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com