சர்வதேச சந்தையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்தியதாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரை போதை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் (என்.சி.பி.) சென்னையில் அண்மையில் கைது செய்தனர்.
போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் போலீஸாருக்கு கடந்த வாரம் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய தென் ஆப்பிக்கா பெண் மோல்பீ கே. லிஸி என்பவரிடம் சோதனை நடத்தினர்.
அப்போது அவரிடம் 990 கிராம் எடையுள்ள `கோகைன்' என்னும் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் ரூ. 5 கோடி மதிப்பிலான அதை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பிரேசில் நகரான சா போலாவிலிருந்து துபை வழியாக சென்னைக்கு வந்த போது லிஸி பிடிபட்டார்.
சென்னையில் பிடிப்பட்ட போதைப் பொருள்களில் இதுவே மிக அதிகமாகும் என என்.சி.பி. மண்டல இயக்குநர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறினார்.
சுற்றுலா விசாவில் சென்னை வந்த லிஸி போதைப் பொருளை கொடுத்துவிட்டு, மீண்டும் தென் ஆப்பிரிக்க செல்வதற்கு திட்டமிட்டிருந்தார் என்றார் சின்ஹா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


