முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

கவிஞர் முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதி அமைச்சர்கள் வழங்கினர்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்த கவிஞர் பி.கே.முத்துசாமிக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளை

News image
Updated On :6 அக்டோபர் 2015, 12:36 am IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்த கவிஞர் பி.கே.முத்துசாமிக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சம் நிதி, மாதாந்திர ஊக்கத்தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
 ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கவிஞர் பி.கே.முத்துசாமி (96).
 சுதந்திர போராட்ட காலங்களில் பல்வேறு மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
 அண்ணா அறுபது, பெரியார் புரட்சி காப்பியம், புரட்சித் தலைவியின் புரட்சி காப்பியம், புரட்சித் தலைவி அந்தாதி போன்ற நூல்களையும், பெரியார், அண்ணா, எம்ஜிஆர். போன்றோரைப் பாராட்டி தனித்தனியே வெண்பாக்களையும் எழுதியுள்ளார்.
 15 ஆயிரம் வெண்பாக்களையும், 1000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.
 பி.கே.முத்துசாமியின் தமிழ்ப் பணியைப் பாராட்டி, டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவியும், மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
 இதையடுத்து, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், பி.தங்கமணி ஆகியோர் ஆர்.புதுப்பட்டியில் உள்ள பி.கே.முத்துசாமியின் இல்லத்துக்கு திங்கள்கிழமை நேரில் சென்றனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முத்துசாமியிடம் ஜெயலலிதா அறிவித்த ரூ.5 லட்சம் நிதி, மாதாந்திர ஊக்கத்தொகையை வழங்கினர்.
 அப்போது கவிஞர் பி.கே.முத்துசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.