திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சம்பள ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் இன்று மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :6 அக்டோபர் 2015, 2:08 pm

சம்பள ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் இன்று மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் கிளை செயலாளர் போஸ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வெள்ளைத்துரை ஆர்ப்பாட்டம் குறி்த்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

இதில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும. 10 மாத அகவிலைப்படியை வழங்குதல், கழகத்திற்கு அரசு வழங்க வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடியை வழங்கவும் மற்றும் காலாவதியான பேருந்துகளை உடனே மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாநில துணைச் செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.