தமிழ்நாடு ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட கிளைக் கூட்டத்திற்கு செயலாளர் என்.முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட ராமசுப்பு, மாவட்ட செயலாளர் எம்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட துணைச்செயலாளர்கள் சுவசுப்பிரமணியன், இளையபெருமாள், பி.நடராஜன் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். நிறைவாக மாவட்ட துணைச்செயலாளர் என்.சிவா நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் மூத்த குடிமக்கள் தனியாக பயனித்தால் மட்டுமே ரயில் கட்டண சலுகை உண்டென்றும், குடும்பத்தினருடனோ மற்றவர்களுடனோ பயணித்தால் கட்டண சலுகை கிடையாது என்ற ரயில் துறையின் உத்தரவை கூட்டம் கண்டனம் செய்கிறது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை விரிவுப்படுத்தி அளிப்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம்!

ராகுல்காந்தி நாளை குளச்சல், நான்குனேரியில் பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

