மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலை அருகே அனுமதியின்றி மதுவிற்ற இருவர் கைது

விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்த இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2015, 2:49 pm

சி. உதயகுமார்

விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்த இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

விராலிமலை அருகே உள்ள வடுகப்பட்டி பகுதியில் அனுமதியின்றி தமிழ்நாடு மாநில வாணிப கழகம்( டாஸ்மாக்) மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக விராலிமலை போலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதிகளில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தோணி குருஸ் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து அம்பாள் நகரில் அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த அடைக்கன் மகன் சின்னையா(40) சுப்பிமணி(52) ஆகிய இருவரையும் கைது செய்து அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.