அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது

விருதுநகர் அருகே ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை மானபங்கம் செய்து விட்டு திருமணத்திற்கு மறுத்த இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

Updated On :2 செப்டம்பர் 2015, 2:21 pm

விருதுநகர் அருகே ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை மானபங்கம் செய்து விட்டு திருமணத்திற்கு மறுத்த இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

விருதுநகர் அருகே இனாம்ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த தாமஸ் என்பவரின் மகள் ஐஸ்வர்யா(19). சூலக்கரை பகுதியைச் சேர்ந்த பசும்பொன் என்பவரின் மகன் அசோக்குமார்(26). இப்பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை வேலை செய்து வருகின்றனர். அதையடுத்து கடந்த ஓராண்டாக பழகியும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இனாம்ரெட்டிபட்டியில் வீட்டில் தனியாக இருந்த ஐஸ்வர்யாவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி குல்லூர்சந்தை-வள்ளிகுளம் சாலைப்பகுதியில் மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று மானபங்கம் செய்தாராம்.

அதையடுத்து, பகல் முழுவதும் அப்பகுதியில் சுற்றி திரிந்துவிட்டு இரவில் இனாம்ரெட்டிபட்டி விலக்கில் வாகனத்தில் இறக்கி விட்டு எங்கள் வீட்டில் உன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கூறியதோடு, மறந்துவிடவும் கூறினாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மானபங்கம் செய்து விட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த அசோக்குமாரை போலீஸார் கைது செய்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.