லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

அண்ணா பிறந்த நாள் விழா: விருதுநகர் மாவட்ட அளவில் 14-ம் தேதி சைக்கிள் போட்டி

விருதுநகர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  சார்பில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வருகிற 14-ம் தேதி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற இருக்கிறது.

Updated On :9 செப்டம்பர் 2015, 1:40 pm

விருதுநகர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  சார்பில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வருகிற 14-ம் தேதி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) முருகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அண்ணா பிறந்த நாள் விழா வருகிற 15-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அதை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சைக்கிள் போட்டி மூன்று பிரிவுகளில் நடத்தப்பட இருக்கிறது.

அதில், 13 வயது வரையிலான மாணவர்களுக்கு 15 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ தூரமும், 15 மற்றும் 17 வயது வரையிலான மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ தூரமும் சைக்கிள் போட்டி நடத்தப்பட இருக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்களே மிதிவண்டிகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையும் அளிக்கப்படும். அதேபோல், 4-வது இடம் முதல் 10 இடங்களை பெறுவோருக்கு தகுதி சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது. இப்போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தங்கள் வயதுக்கான சான்றிதழை தலைமையாசிரியரிடம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், போட்டி நடத்தப்படும் அன்றைய நாளில் காலை 6.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆஜராகவும் வேண்டும் என மாணவ, மாணவிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.