விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு தேர்ப்பவனி நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 31-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற்றது. இதில், ஒவ்வொரு நாளும் திருநாள் திருப்பலி மற்றும் மறையுரை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப்பவனி நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தேனி மறைமாவட்ட அதிபர் எம்.ஜான்மார்ட்டின் அடிகளார், ஆர்.ஆர்.நகர் ஜே.பென்டிக்ட் பர்னபாஸ் அடிகளார், சிந்தலைச்சேரி சிலுவை மிக்கேல்ராஜ் அடிகளார், விருதுநகர் தாமஸ் எடிசன் அடிகளார் ஆகியோர் தலைமையில் தேர்ப்பவனி நடைபெற்றது. இதில், தேரில் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் திருஉருவம் மின்விளக்குகளாலும், வண்ணமலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போகலூா் ஒன்றியத்தில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க விட மாட்டோம்! - நதக வேட்பாளா் உறுதி

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ரூ. 25 லட்சம் மோசடி: உணவக உரிமையாளா் மீது வழக்கு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

