விருதுநகர் மாவட்டத்தில் 263 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 274 சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு போலீஸார் அனுமதி அளித்ததை தொடர்ந்து அப்பணியில் இந்து முன்னணியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 17 - ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இவ்விழாவிற்காக பல்வேறு பகுதிகளில் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவதற்காக 5 அடி முதல் 15 அடி உயரம் வரையி்ல் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முக்கியமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. இதில் விருதுநகர் - 42, சிவகாசி - 53, அருப்புக்கோட்டை - 42, ராஜபாளையம் - 40, ஸ்ரீவில்லிபுத்தூர் - 48, சாத்தூர் - 47, திருச்சுழி - 3 என மொத்தம் 263 இடங்களில் 274 விநாயகர் சிலைகள் ஏற்கனவே காவல்துறை குறிப்பிட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.
இச்சிலைகளை காவல் துறையினர் குறிப்பிடும் நாள்களில் கண்மாய் மற்றும் நீர் நிலைகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழந்தை திருமணத்தை தடுப்பேன் ஆண்டிபட்டி நாதக வேட்பாளா் கோமதி உறுதி

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு! கணவா் தலைமறைவு!!

இலங்கை அதிபருடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு! இந்திய வீட்டு வசதித் திட்டம், மீனவா் பிரச்னை குறித்து ஆலோசனை!!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

