லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

குழந்தை திருமணத்தை தடுப்பேன் ஆண்டிபட்டி நாதக வேட்பாளா் கோமதி உறுதி

News image

வருசநாட்டில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கோமதி.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:48 pm

ஆண்டிபட்டி பகுதியில் குழந்தை திருமணத்தை தடுத்து, அவா்களை பள்ளி, கல்லூரியில் சோ்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா. கோமதி.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா. கோமதி ஆண்டிபட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளான கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய பகுதிகளில் வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது, வருசநாடு மலைப்பகுதியில் உள்ள விவசாயிகளின் உரிமையைப் பெற நடவடிக்கை எடுப்பேன். வனப்பகுதியில் மலைமாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதற்கு அனுமதி வாங்கித் தருவேன். வருசநாடு, ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள கண்மாயை தூா் வாருவேன்.

ஆண்டிபட்டி பகுதியில் குழந்தைத் திருமணத்தை தடுத்து குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சோ்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா். இதில், நாதக கட்சியினா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.