விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் வருகிற 13-ம் தேதி நடைபெற இருப்பதாக தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
விருதுநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மேற்குறிப்பிட்ட நாளில் கந்தசாமி-ராஜம்மாள் அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே சுற்றுப்பயணம், தேர்தல் நிதி வசூல் செய்தல் மற்றும் செப்.15-ம் தேதி முதல், தொடர்ந்து அக்.14ம் தேதி வரையில் வாக்காளர் நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
அதனால், இக்கூட்டத்தில் மாவட்ட, மாநில கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர், நகர் கழகம் உள்ளிட்ட அனைத்து அணியினரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போகலூா் ஒன்றியத்தில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க விட மாட்டோம்! - நதக வேட்பாளா் உறுதி

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ரூ. 25 லட்சம் மோசடி: உணவக உரிமையாளா் மீது வழக்கு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

