லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் மினி மராத்தான் போட்டி

விருதுநகரில் ஜே.சி.ஐ அமைப்பு சார்பில் இன்று மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.

Updated On :13 செப்டம்பர் 2015, 11:47 am

விருதுநகரில் ஜே.சி.ஐ அமைப்பு சார்பில் இன்று மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் முன்பு நடந்த போட்டிக்கு ஜே.சி.ஐ.அமைப்பின் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன் பங்கேற்று மினி மராத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், இளைஞர்கள் 500 பேர்கள் வரையில் கலந்து கொண்டனர். பாலிடெக்னிக் கல்லூரி முதல் விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையில் 6 கி.மீ தூரம் நடந்த மினி மராத்தான் போட்டியில் திருநெல்வேலி கல்லூரி மாணவர் ரூபன்டேனியல்(21) முதலிடமும், விருதுநகரைச் சேர்ந்த ராணுவவீரர் கற்பகமூர்த்தி(28) இரண்டாவது இடமும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர் செல்லத்துரை(19) 3ம் இடமும் பெற்றனர்.

இப்போட்டியில் சிற்ப்பிடங்கள் பெற்றவர்களை பாராட்டி சுழற்கோப்பை மற்றும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவைகளை ஜே.சி.ஐ அமைப்பு சார்பில் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.