தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தமிழக வளர்ச்சியை இலக்காக கொண்டு 2016 பேரவைத் தேர்தலில் கூட்டணி: தமிழிசை செளந்தரராஜன்

தமிழகத்தின் வளர்ச்சியை இலக்காக கொண்டு 2016 இல் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

News image
Updated On :4 மார்ச் 2016, 6:02 am

ஷேக் அப்துல்காதர்

தமிழகத்தின் வளர்ச்சியை இலக்காக கொண்டு 2016 இல் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 65 ஆவது பிறந்த தினம் வியாழக்கிழமை (செப். 17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் இருந்து புதன்கிழமை பிரதமருக்கு இ-மெயில் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பி நிகழ்ச்சி நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சி தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இ-மெயில் மூலம் பிரதமருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி தொடங்கினார். அவரிடம் நாராணம்மாள்புரம் கேன்பிரிட்ஜ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர், மாணவிகள் 350 பேர் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் அஞ்சல் அட்டையினை வழங்கினர்.கட்சி நிர்வாகிகள் உள்பட 500 பேர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் கட்டளை எஸ். ஜோதி, மாநில செயற்குழு உறுப்பினர் மு. பாலசுப்பிரமணியன், வழக்குரைஞர் டி. பாலாஜிகிருஷ்ணசுவாமி, மாவட்ட பொதுச்செயலர் எஸ்.வி. குருசாமி, அமைப்புச் செயலர் டி.வி. சுரேஷ், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு அணி நிர்வாகி முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் அவர் அளித்தப் பேட்டி: நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிரமதர் நரேந்திரமோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியினை தமிழகத்தின் தென்கோடியிலிருந்து இ-மெயில் மூலம் அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தென்தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தொழில் தொடங்கப்படும் என முதலீட்டாளர்கள் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழக முதல்வரும் தென்தமிழகத்தில் தொழில் தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கரையுடன் செயல்பட்டு வருகிறது.

2016 இல் மிகப்பெரிய சக்தியாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சித் திகழும் என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தின் மாற்று அரசியல் சக்தியாக பாஜக விளங்கும். தமிழகத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் பாஜகவில் உள்ளனர். இதில் 1 லட்சம் பாஜக உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் அளிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பணியினை மேற்கொள்ள 38 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கை வெளியிடும் வகையில் அக்குழுக்கள் செயல்படும். 234 பேரவைத் தொகுதியிலும் மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிகாரில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும். தமிழகத்தில் 2016 இல் பாஜக மிகப்பெரிய சக்தியாக திகழும் வகையில் தேசிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு

தேர்தல் பணி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையிலான பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் பிரச்னையில் மனிதாபிமான முறையில் தீர்வு காண வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழக மீனவர்கள் பிரச்னையில் நிரந்தர தீர்வு காணும் சூழல் உருவாகியுள்ளது. மீனவர் பிரச்னையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட தமிழக தலைவர்கள் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். இலங்கையில் தமிழர்கள் பங்களிப்புடன் அதிகாரம் என்ற நிலை உருவாகியிருப்பது பிரதமர் மோடி அரசின் நடவடிக்கைதான காரணம்.

தமிழக்ததில் ரூ. 3 ஆயிரம் கோடியில் இணையதள சேவை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய அரசு தமிழக அரசுக்கு அளித்து வரும் முழு ஒத்துழைப்பின் அடிப்படையில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதேபோல் குளச்சல் துறைமுகம், ரூ. 60 ஆயிரம் கோடியில் மின் வளர்ச்சித் திட்டம் போன்றவை தமிழகத்தின் வளர்ச்சியில் பாஜக அரசு அக்கரையுடன் செயல்படுவதற்கு உதாரணம். திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை.

தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படுகிறது. பிரதமர், முதல்வர் சந்திப்புக்கு பிறகு தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்படுகிறது.

மத்தியில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் திமுக ஆட்சி செய்தபோது, இலங்கை தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. 234 பேரவைத் தொகுதியிலும் பாஜக தனது பலத்தை நிரூபிக்க தயாராக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை இலக்காக கொண்டு 2016 இல் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.