தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

கையில் மருதாணி வைத்த சிறுவனுக்கு ரூ.500 அபராதம் விதித்த பள்ளி: பெற்றோர் குமுறல்

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், கையில் மருதாணி வைத்துச் சென்ற சிறுவனுக்கு ரூ.500 அபராதம்

Updated On :12 அக்டோபர் 2015, 11:09 am IST

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், கையில் மருதாணி வைத்துச் சென்ற சிறுவனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பெற்றோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆடை, அணிகலன்கள் மட்டும் அல்லாமல், இதுபோன்ற சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகளை மீறும் மாணவ, மாணவிகள் தண்டிக்கப்படுவதும், சில பள்ளிகளில் அபராதம் விதிக்கப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.

இந்த நிலையில், கையில் மருதாணி வைத்ததற்காக ரூ.500 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து பெற்றோர் கலக்கத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.