தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லை அருகே தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

திருநெல்வேலி அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு திங்கள்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

News image
Updated On :11 ஏப்ரல் 2016, 9:29 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு திங்கள்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கொலையுண்ட தொழிலாளியின் மனைவிக்கு அரசு ரூ. 5 லட்சம் நிவாரணமும், மாதந்தோறும் உதவித் தொகையும் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் வடக்கு அரியநாயகிபுரம் வி.எம். காலனியை சேர்ந்தவர் ராமையா மகன் குணபாலன் (45). கூலித் தொழிலாளி. இவரது உறவினர் இதே பகுதியை சேர்ந்தவர் செல்வம் (29).

வடக்கு அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த இசக்கி மகன் செல்வம் என்ற மாரிசெல்வம் (32). குடிபோதையில் செல்வத்திற்கும், மாரிசெல்வத்திற்கும் இடையே தகராறு இருந்து வந்ததாம். இதில் செல்வம் மீது மாரிசெல்வத்திற்கு விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே 16.05.2008 அன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மாரிசெல்வம், செல்வத்தை தாக்குவதற்காக அரிவாளுடன் வந்தாராம். இதனை குணபாலன் கண்டித்தாராம்.

இதில் ஆத்திரமடைந்த மாரிசெல்வம், குணபாலனை கட்டையால் தாக்கிவிட்டு தப்பி விட்டாராம். பலத்த காயமடைந்த குணபாலன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். முக்கூடல் போலீஸார் வழக்குப் பதிந்து செல்வம் என்ற மாரிசெல்வத்தை கைது செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த திருநெல்வேலி 2 ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ. அப்துல்காதர், திங்கள்கிழமை குற்றவாளி மாரிசெல்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் குணபாலன் மனைவிக்கு மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 வருடம் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இவ்வழக்கில் இறந்த குணபாலன் மனைவிக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். அவருக்கு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் உதவித் தொகை வாழ்நாள் முழுவதும் வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக ராஜபிரபாகரன் ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.