நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

3 நாள் விடுமுறைக்கு பின் வங்கிகள் திறப்பு: பணம் எடுக்க அலைமோதும் மக்கள்

3 நாள்கள் விடுமுறைக்கு பின் புதுவையில் வங்கிகள் திறக்கப்பட்ட நிலையில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக உதவித் தொகை பெறுவதற்காக முதியோர் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.

News image
Updated On :14 டிசம்பர் 2016, 6:57 am

சுஜித்குமார்


புதுச்சேரி: 3 நாள்கள் விடுமுறைக்கு பின் புதுவையில் வங்கிகள் திறக்கப்பட்ட நிலையில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக உதவித் தொகை பெறுவதற்காக முதியோர் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.

மத்திய அரசு கருப்புப் பணத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 8-ம் தேதி 500, 1000 என உயர் மதிப்புகொண்ட ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தது.

இதற்கு பதிலாக ரூ.2000, 500 புதிய நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட நடவடிக்கை எடுத்தது. ஆனால் ரூ.2000 புதிய நோட்டுகள் மட்டுமே வங்கிகளில் தரப்படுகின்றன. 500 ரூபாய் புதிய நோட்டு கிடைக்காத நிலையே தொடர்ந்து நீடித்து வருகிறது.

புதுச்சேரியில் ஏற்கனவே பணத்தட்டுப்பாடு பிரச்னையில் வியாபாரம் வழக்கத்தை விட 20 சதவீதம் அளவுக்கே நடந்து வருகின்றன. புதுச்சேரியில் தொடர்ந்து 80 சதவீத ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டே உள்ளன.

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்ற பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள் அன்றாடச் செலவுகளை மேற்கொள்ளும் போது, வணிக நிறுவனங்களில் உள்ள "ஸ்வைப்' இயந்திரங்களில் தங்களது பற்று மற்றும் கடன் அட்டைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறி வருகிறது.

3 நாள்கள் தொடர் விடுமுறை
இந்நிலையில் சனி, ஞாயிறு, செவ்வாய்க்கிழமை என 3 நாள்கள் விடுமுறைக்கு பின் வங்கிகளில் புதன்கிழமை பணம் எடுப்பதற்காக காலை முதலே பெருங்கூட்டம் காணப்பட்டது. ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல் பணம் இருப்பு இல்லை என்ற அறிவிப்பு பலகையுடன் மூடப்பட்டிருந்தன.

உதவித்தொகை பெற முதியோர் அவதி
புதுச்சேரியில் முதியோர், கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. குறிப்பாக முதியோருக்கு வயதுக்கேற்ப ரூ.3000 வரை தரப்படுகிறது. அங்கன்வாடிகள் மூலம் உதவித்தொகை தரப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசின் நேரடி மானியத் திட்டத்தின் கீழ் அவர்களது வங்கிக் கணக்கிலேயே இத்தொகை மாதந்தோறும் 7-ம் தேதிக்கு மேல் அரசால் போடப்படுகிறது.

இந்நிலையில் முத்தியால்பேட்டையில் உள்ள பாரதியார் கிராம வங்கியில் உதவித்தொகை பெறுவதற்காக காலை 8 மணிக்கே முதியோர் வந்து குவிந்து விட்டனர். கடந்த நவம்பர் மாதம் உதவித் தொகை பெறுவதற்காக 3 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பலர் மயக்கம் அடைந்தனர். அதனால் காலையிலேயே வந்து விட்டோம்.

வழக்கம் போல் அங்கன்வாடிகள் மூலமே உதவித் தொகையை முதியோருக்கு தர வேண்டும். இல்லையென்றால் வங்கிகளில் முதியோருக்கு டோக்கன்கள் வழங்கி உதவித்தொகை வழங்க வேண்டும் எனக்கோரியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.