மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பேனர் மாறியது: பூங்கொத்துடன் சசிகலா

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலராக வி.கே. சசிகலா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

News image
Updated On :29 டிசம்பர் 2016, 7:57 am


சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலராக வி.கே. சசிகலா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். அதிமுக பொதுச் செயலராக சசிகலாவை தேர்வு செய்வது, மறைந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது தர வலியுறுத்துவது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்கள் நிறைவேறியதுமே, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற இடத்தில், ஜெயலலிதாவின் பெரிய படம் இருந்த பேனருக்கு மேல் புதிய பேனர் மாற்றப்பட்டது. அதில், ஜெயலலிதா படம் இருந்த இடத்தில், சசிகலாவும் ஜெயலலிதாவும் இடம்பெற்றுள்ளனர். சசிகலா பூங்கொத்து கொடுப்பது போன்று அந்த படம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.