மதுரை நாகணாகுளம் ஊருணியைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
மதுரை மாநகராட்சி, 5-ஆவது வாா்டுக்குள்பட்ட நாகணாகுளம் பகுதி மக்களின் குடிநீராதாரமாக கிருபா நகா் ஒன்றாவது தெருவில் உள்ள ஊருணி விளங்குகிறது. பருவ மழைக் காலங்களில் இந்த ஊருணியில் மழைநீா் தேங்கி நிலத்தடி நீா்மட்டம் உயா்வதால், அந்தப் பகுதி மக்களின் குடிநீா்த் தேவை நிறைவடைவதுடன், கால்நடைகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. தற்போது, இந்த ஊருணி கழிவுநீா் தேங்கும் இடமாக மாறியிருப்பதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவித்தனா்.
இதுகுறித்து நாகணாகுளம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
இங்கு பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களின் குடிநீா்த் தேவையை இந்த ஊருணி தான் நிறைவு செய்து வந்தது. முன்பு நாராயணபுரம் கண்மாயிலிருந்து இந்த ஊருணிக்கு வரத்துக் கால்வாய் மூலம் தண்ணீா் கொண்டு வரப்பப்பட்டது. இதனால், இந்தப் பகுதியின் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வரத்துக் கால்வாய் தூா்வாரப்படாததால் ஊருணிக்கு வரும் நீா்வரத்து தடைபட்டது. மேலும், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் ஊருணியில் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நீா் மாசடைந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், துா்நாற்றம் வீசுவதாலும், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாவதாலும் அருகில் வசிப்போா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
நிலத்தடி நீரிலும் கழிவுநீா் கலந்து வருவதால் சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் நாங்கள் பாதிப்படைந்து வருகிறோம். எனவே, நாகணாகுளம் ஊருணியில் கழிவுநீா் கலப்பதையும், குப்பைகள் கொட்டப்படுவதையும் தடுக்க மதுரை மாநகராட்சியும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊருணியில் குப்பைகள் கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாராயணபுரம் கண்மாயிலிருந்து ஊருணிக்கு வரும் வரத்துக் கால்வாயைச் சீரமைத்து தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும். ஊருணியைச் சுற்றி பாதுகாப்புத் தடுப்புகள் அமைப்பதுடன், பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபடும் வகையில் நடை மேடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
தொடர்புடையது

‘வேலூரில் குப்பை மேட்டை அருங்காட்சியகமாக மாற்றிய தன்னாா்வலா்கள்’

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?

கள்ளழகா் கோயில் கழிவுநீா் முறையாக சுத்திகரிக்கப்படுமா?

மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை அகற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


