நேரடியாக மூலஸ்தானம் சென்ற அவர் 10 நிமிடங்கள் நின்றவாறே சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவரும் பிரேமலதாவும் மூலஸ்தானம் முன்பு அமர்ந்து, ஸ்ரீஆண்டாளுக்கு பிடித்த 1008 தாமரை, அரக்கு புடவை, கற்கண்டு சாதத்துடன் ஷைஸ்ராநாம அர்ச்சனை செய்தனர். சுமார் 55 நிமிடங்கள் இந்த அர்ச்சனை நடைபெற்றது. வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள கட்சி மாநாட்டின் அழைப்பிதழ் இடையே கொண்டு வரப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் ஒரு பெரிய கவர் சுவாமி முன்பு வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இந்தக் கவரில் வேட்பாளர் பட்டியல் உள்ளது என்றும் பொதுவாக கட்சியினர் அங்கு பேசிக் கொண்டனர்.