

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
ரஷ்ய நாட்டு உதவியுடன் இந்த இரு அணு உலைகளும் அமைக்கப்படுகிறது.
கூடங்குளத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர், மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான இயக்குநர் பி.ஏ.பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி இந்த மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் அமைக்கப்படுகிறது. இரு அணு உலைகளும் தலா 1000 மெகா வார்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அணு உலை கட்டுமானப் பணிகள் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் கூறினர்.
கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது அணு உலை பல்வேறு போரட்டங்களுக்குப் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தியை தொடங்கியுள்ளது. இரண்டாம் அணு உலைகளுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இரண்டாம் அணு உலை இயங்கத் தொடங்கும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.