மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

போக்குவரத்துக் காவலருக்கு பணியின்போது குளிர்பானம் வழங்கும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது.

News image
Updated On :21 பிப்ரவரி 2016, 12:49 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில், போக்குவரத்துக் காவலராக பணிபுரிபவர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிப்பதற்காக தமிழக முதல்வரின் உத்தரவுப்படி குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆர்.சி. தேவாலய சந்திப்பு அருகே போக்குவரத்துக் காவலருக்கு மோர் மற்றும் எலுமிச்சம்பழம் சாறு உள்ளிட்டவற்றை வழங்கி நகர் காவல் ஆய்வாளர் ஜே.மகேஸ்குமார் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு காவலர்களின் நலனில் அக்கறை கொண்டு இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. போக்குவரத்துக் காவலர்களுக்கு பணியின்போது இரு மணி நேரங்களுக்கு ஒரு முறை என ஒரு நாளைக்கு நான்குமுறை அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப மோர் அல்லது எலுமிச்சம்பழச் சாறு வழங்கப்படுகிறது. இது தொடர்ந்து கோடை காலம் முடியும் வரை 4 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் காவல் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.