போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சுவாதி கொலை வழக்கு: தமிழக காவல் துறைக்கு அரசுப் பணியாளர்கள் சங்கம் பாராட்டு

மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் மிக துரிதமாக, இரவு பகல் பாராது உழைத்து குற்றவாளியைக் கைது...

News image
Updated On :2 ஜூலை 2016, 7:17 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் மிக துரிதமாக, இரவு பகல் பாராது உழைத்து குற்றவாளியைக் கைது செய்த தமிழக காவல் துறைக்கும், இதனை வழிநடத்திச் செல்லும் தமிழக முதல்வருக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவரும், தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவருமான ஆ.காமராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மென் பொறியாளர் சுவாதியை படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியை தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உத்தரவுபடி, மிகத் துரிதமாக துப்புத்துலக்கி கண்டுபிடித்து கைது செய்த தமிழக காவல் துறைக்கு சங்கம் சார்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக பேணி பராமரித்து நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றை அடியோடு தடுத்து நிறுத்தியுள்ள தமிழக காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு சங்கம் பாராட்டு தெரிவிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.