தமிழின் மூத்த படைப்பாளி, கவிஞர் ஞானக்கூத்தன் இன்று இயற்கை எய்தினார்.
பொதுமக்கள் மற்றும் எழுத்தாளர்கள் அஞ்சலிசெலுத்தினர்; ஞானக்கூத்தனின் இறுதிச் சடங்குகள் காலை 10 மணி அளவில் திருவல்லிக்கேணி ஈஸ்வர தாஸ் லாலா தெருவில் உள்ள அவரது மகனது இல்லத்தில் நடைபெறும் என தகவல். தமிழ் படைப்புலகில் மிக முக்கியமான பங்களிப்பைச்செய்த மூத்த எழுத்தாளர் ஞானக்கூத்தன் மறைவு இலக்கிய உலகில் மாபெரும் இழப்பு என்று மூத்த எழுத்தாளர்கள் சா.கந்தசாமி மற்றும் பாலகுமாரன் உள்ளிட்டோர் கூறினர். சா.கந்தசாமி ஞானக்கூத்தன் பற்றி பேசுகையில் ’பிறப்பால் கன்னடரான ஞானக்கூத்தன் தமது இலக்கிய பங்களிப்பை தமிழில் தான் அளித்தார். கன்னடத்தில் அவரது பங்களிப்பு எதுவும் இருந்ததாக தான் அறிந்ததில்லை’ என்று தெரிவித்தார். பாலகுமாரன் பேசுகையில் மிகப்பெரும் கவிஞர் தமிழ் இலக்கிய உலகில் அவரது இழப்பு ஈடு கட்ட முடியாதது என்று கூறினார். முப்பது ஆண்டுகளாக இரண்டு தலைமுறைக் கவிஞர்களுக்கு முன்னோடியாக விளங்கிய அவரது மறைவு படைப்பாளிகளைத் பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.