
மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மா மறைவுக்கு அன்புமணி இரங்கல்
மக்களவை முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பி.ஏ. சங்மா உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும், துயரமும் அடைந்தேன் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மக்களவை முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பி.ஏ. சங்மா உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும், துயரமும் அடைந்தேன் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், இந்தியாவின் நாகரீகமான, முதிர்ச்சி நிறைந்த அரசியல் தலைவர்களில் பி.ஏ. சங்மா முக்கியமானவர். மேகாலயா மாநில முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியவர். 8 முறை மக்களவை உறுப்பினராக செயல்பட்டிருக்கிறார். 1996 முதல் 1998 வரை மிகவும் சிக்கலான கால கட்டத்தில் ஆளும் கூட்டணியை சாராத மக்களவைத் தலைவராக செயல்பட்டவர். ஒரு மக்களவைத் தலைவர் எவ்வாறு நடுநிலையாக செயல்பட வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். அதற்குப் பிறகு வந்த மக்களவைத் தலைவர்கள் அனைவருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
பி.ஏ.சங்மா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேசிய மக்கள் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






