நீலகிரி மலை ரயில் என்ஜினில் கோளாறு: நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்

கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நீலகிரி மலை ரயில் இன்று காலை 7.10 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 170 பயணிகளுடன் புறப்பட்டது. குன்னூர் ரயில் நிலையத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரமே இருந்த நிலையில், ரயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மலை ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

இதனால், பாதி வழியிலேயே ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள் அனைவரும் நடந்தே குன்னூர் ரயில் நிலையத்துக்குச் சென்றனர்.

மற்றொரு என்ஜினை எடுத்துச் சென்று ரயிலை குன்னூர் ரயில் நிலையத்துக்கு இழுத்து வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com