தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கல்லிடைக்குறிச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் திங்கள்கிழமை பிரதான சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :28 மார்ச் 2016, 5:06 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் திங்கள்கிழமை பிரதான சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி அருகே பொன்மாநகர் பகுதியில் வசிக்கும் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் சில தினங்களுக்கு முன் திருநெல்வேலியில் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி காலை 10 மணியளவில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் பேருந்து நிறுத்தம் அருகில் பிரதான சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.