சென்னை: மவுலிவாக்ககம் கட்டிட இடிப்பின் காரணமாக சென்னையின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடிக் கட்டிடத்தை உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக இடிக்கும் பணிகள் தற்பொழுது நடந்து வருகிறது. இதன் காரணமாக போரூர் - மவுலிவாக்கம் சாலையில் காலை முதலே போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அருகில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிண்டி, வடபழனி கோடம்பாக்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.