நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: 17-19ம் தேதி வரை மதுக்கடைகள் மூட உத்தரவு
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி மாலை முதல் 19-ந்தேதி மாலை வரை மதுபானகடைகள் மற்றும் சாராயம் - கள் கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.


புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி மாலை முதல் 19-ந்தேதி மாலை வரை மதுபானகடைகள் மற்றும் சாராயம் - கள் கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையர் ஆபேல் ரொசாரியோ எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி மாநில நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர் உள்பட 11 பேர் போட்டியிடுகிறார்கள்.
தேர்தலில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பறக்குபடையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் மதுபானம் கடத்தல்களை தடுப்பதற்கான கலால்துறை அதிகாரிகள் 3 பறக்கும்படைகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் வாக்குபதிவை முன்னிட்டு 3 நாட்கள் மதுபானகடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கலால்துறை துணை ஆணையர் ரொசாரியோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி மாலை 4 மணி முதல் அனைத்து மதுபானகடைகள் மற்றும் சாராயம்-கள் கடைகள் மூடப்படும். இந்த கடைகள் 19-ந்தேதி இரவு 7 மணிக்கு தான் திறக்க வேண்டும்.
இதே போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22-ந்தேதி அன்று மாலை 5 மணிக்கு தான் திறக்க வேண்டும் என்றும், இதை மீறி கடை திறப்பவர்கள் மீது கலால்துறை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...