மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன், குருவாயூரப்பன் கோயிலில் சபரிமலை புதிய மேல் சாந்தி தரிசனம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் சபரிமலை புதிய மேல் சாந்தி டி.எம்.உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தரிசனம் செய்தார்.

News image
Updated On :3 நவம்பர் 2016, 5:43 am


சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் சபரிமலை புதிய மேல் சாந்தி டி.எம்.உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தரிசனம் செய்தார்.

கோயிலுக்கு வியாழக்கிழமை வந்த சபரிமலை புதிய மேல் சாந்தி டி.எம்.உன்னிகிருஷ்ணனை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்ப பக்த சபாவின் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, செயலர் சசிகுமார் உள்ளிட்ட  நிர்வாகிகள் வரவேற்றனர்.

திருவிதாங்கூர் தேவஸம் போர்டு சார்பில் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில், மாளிகாபுரத்தம்மன் கோயிலுக்கும் இந்த ஆண்டு (2017) கார்த்திகை 1 முதல் ஓராண்டுக்கு புதிய மேல் சாந்தி பதவிக்காக 15-க்கும் மேற்பட்டோர் பெயரை பரிந்துரைத்தது.

அக்டோபர் மாதம் 17-ந்தேதி பாரம்பரிய முறைப்படி அப் பெயர்களை எழுதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரு குழந்தைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்ததில் சபரிமலை புதிய மேல் சாந்தியாக கேரள மாநில பாலக்காடு செர்பலசேரியை சேர்ந்த தெக்கும்புரத்து மனையைச் சேர்ந்த டி.எம்.உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாளிகாபுரத்தம்மன் மேல் சாந்தியாக கேரள மாநில செங்கனாச்சேரியைச் சேர்ந்த வாழப்பள்ளி புது மனையை சேர்ந்த மனு நம்பூதிரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பதவியேற்பு:

தேர்ந்தெடுக்கப்பட்ட சபரிமலை புதிய மேல் சாந்தி டி.எம்.உன்னிகிருஷ்ணனும், மாளிகாபுரத்தம்மன் மேல் சாந்தி மனு நம்பூதிரியும் வரும் நவம்பர்  6-ஆம் தேதி (கார்த்திகை 1-ஆம் தேதி) வேதபாராயணங்கள் முழங்க பதவியேற்கின்றனர். இதையொட்டி பல்வேறு ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் மேல் சாந்தி பதவிகளை ஓராண்டுக்கு மேல் வகிக்க முடியாது. மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.