/

சிவகாசியில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

சிவகாசியில் வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ பத்தாயிரம் திருடுபோய்விட்டதாக போலீஸில் திங்கள்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது. 

Updated On :17 அக்டோபர் 2016, 10:24 am
சிவகாசி: சிவகாசியில் வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ பத்தாயிரம் திருடுபோய்விட்டதாக போலீஸில் திங்கள்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது. 
சிவகாசி என்.ஜி.ஓ.காலனியைச் சேர்ந்தவர் ஜெயசேகரன்(60). இவர் முன்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். தற்போது வியாபாரம் எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டைப்பூட்டிவிட்டு மதுரை உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு தாங்கள்கிழமை திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம் . உள்ளே சென்று பார்த்தபோது, பிரோஉடைக்கப்பட்டு அதில்  வைத்திருந்த 7பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ பத்தாயிரம் திருடுபோயுள்ளது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.