மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காவிரி விவகாரம்: குடியரசுத்தலைவருடன் மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு!

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதி மன்றம் கூறியபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக,  குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர்.

News image
Updated On :21 அக்டோபர் 2016, 10:16 am

DIN

டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதி மன்றம் கூறியபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக,  குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு எடுத்த நிலைப்பாடு தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்காமல்      மவுனம் காக்கிறார். யாரையும் அவர் சந்திக்கவும் இல்லை.  இந்த நிலையில்தான் காவிரி விவகாரம் தொடர்பாக இரு மாநில தலைவர்களும், பிரமுகர்களும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து வருகிறார்கள்.

அந்த வகையில் மக்கள் நலக்கூட்டணியை சேர்ந்த வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் குடியரசு தலைவரை இன்று நேரில் சந்தித்து மனு அளிக்க தில்லி சென்றனர். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காவிரி பிரச்சனையில் மத்திய அரசு, தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. குடியரசுத்தலைவரை சந்தித்தால் நியாயம் கிடைக்கும் என்பதற்காக அவரை மட்டும் சந்திக்க இருக்கிறோம். பிரதமரை சந்திக்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி மறைமுகமாக கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார். கர்நாடக அரசு சட்ட விரோதமாக அணை கட்டுவதற்கு மத்திய அரசு துணை போகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது என்றும் வைகோ குற்றம் சாட்டினார்.

பின்னர் இதனைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டாக அவர்கள் பேசினர். அப்போது தெரிவிக்கப்பட்டதாவது:

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் குடியரசுத்தலைவர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தபட்டது.    கர்நாடகா நீர் தராத காரணத்தால் விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.