ஓ. பன்னீர்செல்வம் புகாருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
ஓ. பன்னீர்செல்வம் கூறிய புகாருக்கு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.


ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் கூறிய புகாருக்கு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விஜயபாஸ்கர் கூறியதாவது, பதவி கிடைக்காத விரக்தியில் குழம்பிப் போய் தவறான தகவல்களை கூறி வருகிறார் ஓ.பி.எஸ். முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் கூறி நாங்கள் கேட்கவில்லை என கூறுவது வியப்பாக உள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி மருத்துவ அறிக்கைகள் மூலம் விளக்கப்பட்டன. வெளிநாட்டு சிகிச்சை குறித்து ஆளுநரிடம் ஓ.பி.எஸ் கூறியிருக்கலாமே என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...