தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முற்றுகை: தில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக களம் கண்ட மாணவர்கள்!

தில்லியில் 28 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, இளைஞர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ...

News image
Updated On :11 ஏப்ரல் 2017, 7:05 am

DIN

சென்னை: தில்லியில் 28 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, இளைஞர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒன்றிணைந்து, இன்று நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டனர்.

வறட்சி நிவாரணம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் கடந்த 28 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்களில் சிலர் தங்களை சந்திக்க மறுத்த பிரதமர் மோடியைக் கண்டித்து, முழு நிர்வாண போராட்டடத்தில் கூட ஈடுபட்டனர். இது தமிழகம் முழுவது அதிர்ச்சியலைகளை உண்டாக்கியது.

இந்நிலையில் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இளைஞர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அதிகமான அளவில் இன்று ஒன்றிணைந்து, நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டனர்.

அங்கு அவர்கள் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் எதிர்த்து கோஷமிட்டனர். அருகில் உள்ள ஹாடோஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியலை ஈடுபடவும் சிலர் முயன்றனர்.  அவர்களில் சிலர் அரை நிர்வாண கோலத்திலிருந்ததால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.