சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அதிமுகவில் அடுத்தது என்ன? டி.டி.வி.தினகரனை சந்தித்த பின்பு செங்கோட்டையன் பேட்டி! 

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ் அணியினர் மீண்டும் கட்சியில் இணைவதை அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வரவேற்பதாக ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:19 pm

DIN

சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ் அணியினர் மீண்டும் கட்சியில் இணைவதை அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வரவேற்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது குறித்து நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்கு தயராக இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதை அடுத்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை அவரது அடையார் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற மாற்று அணியினர் மீண்டும் கட்சியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தினோம். அதே போல் கட்சியினை வலுப்படுத்துவது குறித்தும் பல்வேறு வழிகள் ஆலோசிக்கப்பட்டது. 

அதிமுகவின் சின்னமான இரட்டைஇலையை மீட்க வேண்டும் என்பதே கட்சியினர் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது குறித்து பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கள் தினகரனிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ் அணியினர் மீண்டும் கட்சியில் இணைவதை அதிமுக துணை பொதுச் செயலாளரான தினகரன் வரவேற்கிறார். இதை தான் முன்பே வலியுறுத்தியுள்ளதை அவர் குறிப்பிட்டார்.

எனவே பேச்சு வார்தை நடத்துவதற்கான குழுக்கள் விரைவில் உருவாக்கப்படும். அதே போல சின்னம் மீட்ப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடன் தாக்கல் செய்ய வேண்டிய பிரமானப்பத்திரம் பற்றியும் ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.