அந்திய செலாவணி முறைகேடு வழக்கில் டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை.
அந்நியச் செலாவணி மோசடி தொடர்பாக அதிமுக துணைப் பொதுச் செயலரான டிடிவி தினகரன் மீது அமலாக்கத் துறை இரண்டு வழக்குகளை பதிவு செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த இரு வழக்குகளும் எழும்பூர் இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன.
ஆனால் டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. எனவே ஏப்ரல் 24ஆம் தேதி தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி மலர்மதி உத்தரவு பிறப்பித்தார்.