மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நடிகை குஷ்பு வெளிநாடு செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி

நடிகை குஷ்பு வெளிநாடு செல்ல அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :26 ஏப்ரல் 2017, 7:52 pm

DIN

நடிகை குஷ்பு வெளிநாடு செல்ல அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, தேனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தபோது தேர்தல் விதிகளை மீறியதாக ஆண்டிப்பட்டி, தேனி, நத்தம் காவல் நிலையங்களில் குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே தடை விதித்துள்ளது.
இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, குஷ்புவின் கடவுச்சீட்டை புதுப்பித்துத் தர சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் மறுத்தது. இதை எதிர்த்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வெளிநாடு செல்லும் போது எந்த நாட்டுக்கு செல்கிறார், எங்கு தங்குகிறார் உள்ளிட்ட விவரங்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஏப்ரல் 26 முதல் மே 14 வரை பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல உள்ளதாகவும், எனவே தனக்கு வெளிநாடு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும் நடிகை குஷ்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை குஷ்பு தனது குடும்பத்தினருடன் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.