மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

டிடிவி தினகரன் கைதில் திடீர் திருப்பம்: ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறை அதிகாரியிடம் விசாரணை

இரட்டை இலைச் சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் திடீர் திருப்பமாக, சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறை அதிகாரியிடம் தில்லி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :28 ஏப்ரல் 2017, 7:19 am

DIN


சென்னை: இரட்டை இலைச் சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் திடீர் திருப்பமாக, சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறை அதிகாரியிடம் தில்லி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், பண மோசடிக்கு உதவியதாக இடைத்தரகர் நரேஷ் என்பவரையும் தில்லி காவல்துறை இன்று கைது செய்துள்ளது.

டிடிவி தினகரன்  மற்றும் மல்லிகார்ஜுன் ஆகியோர் நேற்று தில்லியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டனர், பிறகு, தினகரன் அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவரிடமும், அவரது மனைவியிடமும் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், தில்லி காவல்துறையினர் இன்று காலை சென்னை ஆதம்பாக்கத்துக்கு வந்தனர். ஆதம்பாக்கம் காவல்துறை உதவியுடன், அங்கு ஒரு முக்கிய நபரின் வீட்டை தேடினார்கள். ஆனால், அவர்கள், தினகரனையும் மல்லிகார்ஜுனாவையும் உடன் அழைத்து வரவில்லை.

அதில், மன்னார்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறை அதிகாரி மோகன் என்பவருக்கும், இந்த வழக்குக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் தில்லி போலிசார் விசாரணை நடத்தி வருவதாக அங்கிருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், முன்னாள் பொதுப் பணித்துறை அதிகாரி மோகன் வீட்டை கண்டறிந்த தில்லி காவல்துறை, அவரது வீட்டுக்குள் சென்று மோகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.