மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுக்கடைகளை மூட கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

மதுக் கடைகளை மூட கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவரும் மக்களவை

News image
Updated On :30 ஏப்ரல் 2017, 2:02 pm

DIN

சென்னை: மதுக் கடைகளை மூட கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான  அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்திய ஜனநாயக கட்டமைப்பில் மிகவும் அதிகாரம் மிக்க அமைப்புகளில் ஒன்றாக கிராம சபை திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விடுதலை நாள், குடியரசு நாள், மகாத்மா காந்தி பிறந்த நாள் என மொத்தம் 4 முறை கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுவது கட்டாயமாகும்.

அந்த வகையில், 12,500-க்கும்  மேற்பட்ட கிராங்களில் மே 1 ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. கிராமப்புற மக்கள் தங்களின் கோரிக்கைகளை அரசுக்கு நேரடியாக தெரிவிக்க கிராமசபைக் கூட்டங்கள் மிகவும் அரிய வாய்ப்பாகும்.

தமிழகத்தின் இன்று மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது மதுவால் ஏற்படும் சீரழிவுகள் தான். இப்போது மதுக் கடைகளுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இத்தகைய சூழலில் மதுக்கடைகளுக்கு எதிராக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதன்மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

எனவே, புதிய மதுக்கடைகள் திறக்கப்படக் கூடாது. ஏற்கனவே உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி, நீர் நிலைகளை பராமரித்தல், மணல் கொள்ளையை தடுத்தல், மீத்தேன் எரிவாயுத் திட்டம் மற்றும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற மக்கள் முன்வர வேண்டும் எனக் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.