டிடிவி தினகரனுக்கு எதிரான தீர்மானம் ஈபிஎஸ் அணியின் திட்டமிட்ட நாடகம் என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக துணைப் பொது செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில்,
சசிகலா வேண்டும், டிடிவி தினகரன் வேண்டாம் என்பதெல்லாம் ஈபிஎஸ் அணியின் திட்டமிட்ட நாடகம். சசிகலாவின் முடிவால் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு ஆட்சி காப்பாற்றப்பட்டது.
அதிமுகவில் நிரந்தரமானவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய செயலாளர்கள்தான். ஊழல் ஆட்சி எனக் கூறிய ஓபிஎஸ் அணியுடன் ஈபிஎஸ் அணி சேரப் போகிறதா? எனக் கேள்வி எழுப்பிய அவர் பழனிசாமி தவறான முடிவை எடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



