ஈபிஎஸ் அணியின் திட்டமிட்ட நாடகம்: டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி குற்றச்சாட்டு

டிடிவி தினகரனுக்கு எதிரான தீர்மானம் ஈபிஎஸ் அணியின் திட்டமிட்ட நாடகம் என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 
ஈபிஎஸ் அணியின் திட்டமிட்ட நாடகம்: டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி குற்றச்சாட்டு
Published on
Updated on
1 min read

டிடிவி தினகரனுக்கு எதிரான தீர்மானம் ஈபிஎஸ் அணியின் திட்டமிட்ட நாடகம் என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

அதிமுக துணைப் பொது செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில்,
சசிகலா வேண்டும், டிடிவி தினகரன் வேண்டாம் என்பதெல்லாம் ஈபிஎஸ் அணியின் திட்டமிட்ட நாடகம். சசிகலாவின் முடிவால் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு ஆட்சி காப்பாற்றப்பட்டது. 

அதிமுகவில் நிரந்தரமானவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய செயலாளர்கள்தான்.  ஊழல் ஆட்சி எனக் கூறிய ஓபிஎஸ் அணியுடன் ஈபிஎஸ் அணி சேரப் போகிறதா? எனக் கேள்வி எழுப்பிய அவர் பழனிசாமி தவறான முடிவை எடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com